தமிழ்நாடு
நடந்தே தீரும்.. இன்று சபரிமலை செல்வேன்.. கேரள ஆசிரியை ரேஷ்மா அதிரடி!
கண்ணூர்: சபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.
சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்தவர் இவர்.
ரேஷ்மா கல்லூரி ஆசிரியராக இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட பேஸ்புக் போஸ்டில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல போவதாக அறிவித்தார். தன்னுடன் விருப்பம் உள்ள பெண்களும் வரலாம் என்றும் கூறினார்.
இவரது போஸ்ட் பெரிய அளவில் வைரல் ஆனது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் எப்போதும் போல இவருக்கு எதிராக குதித்தது. அதன்படி, இவரது வீட்டிற்கு வெளியே நின்று போராட்டம் செய்தனர்.