தமிழ்நாடு

‘சண்ட சண்டதான்!’- ஸ்டாலினுக்கு எதிராக தேர்தலில் நிற்பது உறுதி; சீமான் சவால்

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடப் போவது உறுதி என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அவருக்கு எதிராக நான் நிற்பது உறுதி. சண்டை செய்வது என்று முடிவாகிவிட்டது. எனவே நேரடியாக களத்தில் மோதிப் பார்ப்பதுதான் சரியானதாக இருக்கும். திமுகவுக்கு மாற்று இனி அதிமுக இல்லை. திமுகவுக்கு மாற்று இனி நாம் தமிழர்தான்.

திமுகவா, நாம் தமிழரா? திராவிடரா, தமிழரா? இந்த சண்டையைக் கொண்டு வந்து தேர்தலில் நிறுத்துவோம். அதில் மற்றவர்கள் பயப்படலாம். நான் ஒருநாளும் பயப்பட மாட்டேன். அவர் கருணாநிதியின் மகன். நான் பிரபாகரனின் மகள். வாருங்கள் சண்டை செய்து பார்த்திடுவோம். அதிமுகவை எதிர்க்க வேண்டிய தேவையே இல்லை. அதிமுகவைப் பெற்றெடுத்த கட்சி திமுகதான். எனவே திமுகதான் எதிர்க்க வேண்டிய கட்சி. திராவிடத்தை வீழ்த்த முடியாது, அழிக்க முடியாது என்று கூறுகிறார்கள். வாருங்கள் ஒரு முறை மோதிப் பார்த்திடுவோம்’ என்று சவால் விட்டுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version