தமிழ்நாடு

அழகிரி திமுகவில் சேர்க்கப்படுவாரா?: கனிமொழி பதில்!

Published

on

திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி இருந்த போது கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி. அதன் பின்னர் பலமுறை திமுகவில் இணைய முயற்சித்தும் அழகிரியால் முடியவில்லை.

கருணாநிதியின் மறைவிற்கு பின்னரும் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனை நடத்தி, பேரணி நடத்தி கட்சியில் மீண்டும் சேர கடுமையாக முயற்சி செய்தார் அழகிரி. ஆனால் அவர் இன்றுவரை திமுகவில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர்.

மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களை திமுக ஏற்றுக்கொள்கிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், திமுகவில் இணைய வேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் அழகிரி இன்னும் சேர்த்துக்கொள்ளப்படாமலேயே இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, யார் கட்சியில் சேர வேண்டும், யார் கட்சியில் சேரக் கூடாது என்பது குறித்தான முடிவைக் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் எடுக்க வேண்டும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version