தமிழ்நாடு

பொது எதிரி திமுகவை வீழ்த்த அதிமுக-அமமுக கூட்டணி? பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்!

Published

on

பொது எதிரி திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் அமமுக கூட்டணி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர் நாளை மறுநாள் சென்னை வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவின் பொதுச் செயலாளராக மாறுவார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தற்போதைக்கு பொது எதிரி திமுகவை வீழ்த்துவது தான் நமது குறிக்கோள் என்றும் திமுக எந்த காரணத்தை முன்னிட்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்றும் அதற்காக அதிமுக மற்றும் அமமுக முதலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக-அமமுக இணைப்பு குறித்து பேசிக் கொள்ளலாம் என்றும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்வது குறித்து பேசிக் கொள்ளலாம் என்ற வகையில் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.

விரைவில் முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா சந்திப்பு நடக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் திருப்பம் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

seithichurul

Trending

Exit mobile version