தமிழ்நாடு
பிரியாணி வாங்கி தராத கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி!
மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை கண்ட வீட்டின் உரிமையாளர் பணம் கொடுத்த தங்களுக்குப் பிரியாணி வங்கி வாரும்படி கேட்டுள்ளனர்.
அதைப் பார்த்த மனோகரனின் மனைவி சவுமியா, தனக்கும் பிரியாணி வங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று மனோகரன் தட்டிக்கழித்தார் என்றும், அதனால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டும் உள்ளது.
இதில் மனம் இடைந்த சவுமியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன், தன் கணவர் தன்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்றே தீக்குளிக்க முயனேறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேரில் சென்ற காவல் துறையினர், உண்மையாகவே தீக்குளிக்கக் காரணம் பிரியாணி தானா என்று சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துவருகின்றனர்.