இந்தியா

பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

Published

on

பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24 வயது இளைஞருடன் கடந்து 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னரும் சில மாதங்களில் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக சிலகாலம் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து இரண்டு வீட்டுப் பெரியவர்கள் சமாதானம் செய்த நிலையில் சமீபத்தில் மீண்டும் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்/ இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட கணவர் முயன்றதாகவும் மனைவி தனக்கு விருப்பமில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

இருப்பினும் கணவர் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவரின் பிறப்புறுப்பை தனியாக துண்டித்து எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டித்த மனைவி ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version