செய்திகள்

கணவரின் மர்ம உறுப்பை கடித்து துண்டாக்கிய மனைவி… வேலூரில் அதிர்ச்சி…

Published

on

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்துள்ள துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை(50). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ஜெயந்தி(40). ஆடிமாதம் காரணமாக அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி தெருக்கூத்து நடைபெற்றது. அதை பார்க்க சென்ற செந்தாமரை வீடு திரும்பிய போது, அவரின் மனைவி ஜெயந்தி, அதே பகுதியை சேர்ந்த தட்சணா மூர்த்தியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அவர் மூர்த்தியை அடிக்க போக, அதை அவரின் மனைவி தடுக்க என மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, செந்தாமரையிடம் இருந்து கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தியை விடுவிக்க ஜெய்ந்தி கணவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். இதில் அவரின் உறுப்பு துண்டானது. எனவே, அவர் வலியில் துடிதுடித்தார். எனவே, அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதலனை காப்பாற்றுவதற்காக மனைவி கணவனின் மர்ம உறுப்பை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version