வைரல் செய்திகள்

கணவனைக் காதலித்த தோழி… சம்மதம் தெரிவித்த மனைவி- இப்படியும் ஒரு கூட்டுக்குடும்பம்!

Published

on

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கூட்டுக்குடும்பம் ஒன்று வித்தியாசமான கட்டமைப்புடன் உள்ளது.

இந்தியப் பெண்ணான பிடு கரு-வுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஒருவருடன் திருமண ஆக இருவரும் அமெரிக்காவில் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர். ஆனால், திருமண வாழ்க்கை கசக்க கணவனை விவாகரத்து செய்தார் பிடு. ஆனால், விவகாரத்து சோகத்தில் மூழ்கியவர் தனது தோழி சன்னி சிங் மற்றும் அவரது கணவர் ஸ்மிட்டி சிங் ஆகியோரிடம் அடைக்கலம் புகுந்துள்ளார்.

 

ஆரம்பத்தில் சோகத்துக்கு ஆறுதலாக இருந்த ஸ்மிட்டி சிங் மீது காதல் வயப்பட்டுள்ளார் பிடு. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது என்பதை மனைவி சன்னி சிங்-யிடம் தெரிவித்துள்ளார் கணவன். இதனால் சற்றும் கலங்காத சன்னி சிங் தனது கணவருக்கும் தோழிக்கும் திருமணம் செய்து வைத்து தன் குடும்பத்துடனேயே இணைத்துக் கொண்டார்.

ஒரே குடும்பமாக கடந்த 10 ஆண்டுகளுக்காக மேலாக இந்த மூவரும் வாழ்ந்து வருகின்றனர். இரு மனைவிகளுடன் சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறார் ஸ்மிட்டி சிங். மனைவிகள் இருவருக்கும் ஆளுக்கு தலா இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தியக் குடும்பத்தார் யாரும் இந்த வித்தியாச காதல் கூட்டுக்குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் பேச்சுவார்த்தையவே நிறுத்திக் கொண்டுள்ளனர்.

தோழியின் கணவர் மீது வந்த காதல்'.. 'அதை கேட்டதும் டபுள் ஒகே சொன்ன மனைவி'.. தலைசுற்ற வைக்கும் தம்பதியரின் காதல் கதை!

ஆனாலும் காதல் குறையாமல் 7 பேர் கொண்ட கூட்டுக்குடும்பாக வாழ்ந்து வருவதாக இந்தத் தம்பதிகள் தெரிவிக்கின்றனர்.

Trending

Exit mobile version