கிரிக்கெட்
சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுக்காதது ஏன்? சென்னை சூப்பர் கிங்ஸ் விளக்கம்!
தல என்று தோனியை அன்புடன் அழைக்கும் ரசிகர்கள் சின்ன தல என்று சுரேஷ் ரெய்னாவை அழைத்து வந்தார்கள் என்பதும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் போட்டியின் கிங் என்று வர்ணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வந்த சுரேஷ் ரெய்னா 15 போட்டிகளில் 445 ரன்கள் எடுத்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 383 ரன்களும் 2021 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதுமட்டுமின்றி பீல்டிங்கில் அவ்வப்போது சுரேஷ் ரெய்னா சொதப்பி வந்தார். இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்றும் இளம் வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுக்கவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் சின்ன தல கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதற்கு நன்றி என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டுமின்றி இனி எதிர்காலத்தில் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
Super Thanks for all the Yellove memories, Chinna Thala!????
#SuperkingForever ???? pic.twitter.com/RgyjXHyl9l
— Chennai Super Kings (@ChennaiIPL) February 13, 2022