சினிமா செய்திகள்
எஸ்.எஸ்.ராஜமெளலி சங்கியா? நெட்டிசன்கள் குற்றச்சாட்டுக்கு ரசிகர்கள் பதிலடி!
பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. பாகுபலி, பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாகவும், பீரங்கி முனையில் போரிடும் வெள்ளையனை எதிர்த்து வில் அம்பு விட்டு போரிடுவது நகைச்சுவைப் உரியதாக இருந்தது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் ராம் சரண் தேஜா ராமர் வேடமிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் எஸ்.எஸ்.ராஜமெளலியை சங்கி என விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த படத்தில் ராம் சரண் தேஜாவின் கேரக்டர் 1897ஆம் ஆண்டு வாழ்ந்த அல்லூரி சீதாராமன் ராஜு என்பவரின் கதை என்றும் அவர் ஒரு மிகச் சிறந்த ராம பக்தர் என்றும் 18 வயதிலேயே அவர் துறவியாக மாறியவர் என்றும் என்பதால் இந்த கேரக்டரில் நடித்த ராம்சரண் தேஜாவுக்கு ராமர் வேடம் போடப்பட்டதாகவும் மற்றபடி மதத்தை திணிக்கவேண்டும் என்ற எண்ணம் எஸ்எஸ் ராஜமவுலிக்கு சிறிதும் கிடையாது என்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு ரசிகர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.