சினிமா செய்திகள்

மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே சூப்பர்ஸ்டார் இடம் பார்த்தது ஏன்..?

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே இடம் பார்த்து குடியேற்றுவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

சென்னையில் போயஸ் கார்டன் பகுதி என்பது மிகவும் பணக்காரர்கள் வாழும் பகுதி. ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் வீடு போயஸ் கார்டனில் தான் உள்ளது. அதனாலே அந்த ஏரியா மிகவும் பிரபலம். அந்தப் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பும் மிகவும் அதிகம். போயஸ் கார்டன் பகுதியில் இடம் வாங்க வேண்டும் என்றால் ஒரு கிரவுண்ட் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தான் விற்பனை செய்யப்படுகிறது.

25 கோடி ரூபாய் என்பது பணக்காரர்களுக்கு எளிதாக இருந்தாலும் போயஸ் கார்டனில் வீடு, இடம் என்பது கிடைப்பது மிகவும் அரிது. பல ஆண்டுகளுக்கு முன்னாளே இடம் அல்லது வீடு வேண்டும் என்றும் சொல்லி வைத்து டோக்கன் போட்டுவிட வேண்டுமாம். அப்போது தான் யாராவது விற்றால் டோக்கன் வரிசைப்படி இடம் கிடைக்குமாம்.

மிக நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தான் தனுஷ் போயஸ் கார்டனுக்குள்ளேயே இடம் வாங்கியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால், தற்போது நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாவது மாடியில் வசித்து வருகிறாராம்.

பெரிய காலனி போன்ற குடியிருப்பு என்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்குமாம். ரஜினிகாந்த் தனது பேரப் பிள்ளைகளைப் பார்க்க தினமும் வந்துவிடுவாராம். பள்ளி நாட்களில் எல்லாம் சென்னையில் இருந்தால் ரஜினி தான் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவாராம். அப்போது எல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்துவிடுவதால் குடும்பத்தாருக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அதானாலே தனி வீடு வாங்க வேண்டும் என்ற முடிவில் தனுஷ் இருந்துள்ளார்.

ரஜினிக்கு வசதியாக ரஜினி வீடு இருக்கும் எதிர் தெருவிலேயே தற்போது தனுஷ் வீடு வாங்கி பூமி பூஜையையும் முடித்துவிட்டார். தீபாவளிக்குள் வீடு கட்டி முடித்து 2022 புத்தாண்டுக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்களாம் தனுஷ் குடும்பத்தார்.

Trending

Exit mobile version