சினிமா செய்திகள்

’ஜெய்பீம்’ பார்வதி அம்மாளுக்கு வீடுகட்டி தரும் முடிவை திடீரென மாற்றிய ராகவா லாரன்ஸ்!

Published

on

’ஜெய்பீம்’ படத்தின் கதையின் உண்மை கேரக்டரான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அவர் மாற்றி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் உள்ள ராசாக்கண்ணு என்ற கேரக்டர் உண்மையாகவே வாழ்ந்த டைரக்டர் என்பதும் அவருடைய மனைவி பார்வதி அம்மாள் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதி அம்மாள் தற்போது ஏழ்மையில் இருப்பதால் அவருக்கு வீடு கட்டு தர ராகவா லாரன்ஸ் முடிவு செய்தார். இதனை அடுத்து அவரை நேரில் சந்தித்து வீடு கட்டி தருவதாக அவர் உறுதி அளித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ’ஜெய்பீம்’ பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து வீடு ஜெய்பீம் பார்வதிக்கு வீடு கட்டித்தரும் முடிவை மாற்றி உள்ள ராகவா லாரன்ஸ், அதற்கு பதிலாக 8 லட்ச ரூபாய் ஜெய்பீம் பார்வதிக்கு கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version