சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிரியங்கா: இதுதான் காரணமா?

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்காவை அந்த நிகழ்ச்சியிலிருந்து சூப்பர் சிங்கர் குழுவினர் தூக்கி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பிரியங்கா தனது அதிகாரத்தை வெளி காட்டியதால் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்தார்.

இருப்பினும் விஜய் டிவி அவருக்கு மக்கள் வாக்கு போட்டதாக பலமுறை காப்பாற்றியது என்பதும் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி பிரியங்காவை இரண்டாவது இடத்திற்கு முடிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக மைனா நந்தினி தொகுத்து வழங்கினார். மாகாப மற்றும் மைனா நந்தினி ஜோடி நல்லபடியாக தொகுத்து வழங்கினார்கள் என்றாலும், ப்ரியங்கா மீண்டும் திரும்பியதால் அவரை இந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நிகழ்ச்சி குழு உறுதி செய்தது.

ஆனால் ஒரே ஒரு வாரம் மட்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா திடீரென தனது பிக்பாஸ் தோழிகளுடன் சுற்றுப்பயணத்திற்கு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சூப்பர் சிங்கர் குழுவினர் மீண்டும் நந்தினியை தொகுப்பாளினியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மைனா நந்தினியை இந்த சீசன் முழுவதுமே தொகுத்து வழங்கும் என சூப்பர் சிங்கர் குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரியங்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்கள் இந்த மாற்றத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version