சினிமா செய்திகள்
ஷாருக்கான் உடன் நடிக்க மறுத்த நயன்தாரா… பல வருடங்களுக்குப் பின் வெளியான காரணம்!
பாலிவுட் கிங் என்று அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை மறுத்துள்ளார் நடிகை நயன்தாரா.
பாலிவுட் படம் ஒன்றில் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து நடனம் ஆட பலிவுட் இயக்குநர் ஒருவர் நயன்தாராவை அணுகி உள்ளார். ஆனால், அதற்கு சற்றும் யோசிக்காமல் மறுப்புத் தெரிவித்துள்ளார் கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கடந்த 2013-ம் ஆண்டு தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் சேர்த்த கதையாக உருவாகி வெளியான படம் சென்னை எக்ஸ்பிரஸ்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்திருப்பார். அந்தப் படத்தில் தமிழ் நடிகர்கள் சத்தியராஜ், பெசன்ட் நகர் ரவி ஆகிய நடிகர்கள் நடித்திருப்பர். இந்தப் படத்தை இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கினார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ‘ஒன் டூ த்ரீ ஃபோர்…’ என்கிற குத்துப் பாடல் அன்றிலிருந்து இன்று வரையில் அகில இந்தியாவுக்கும் ட்ரெண்டிங் பாடல் ஆக உள்ளது.
இந்தப் பாடலில் ஷாருக்கான உடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட முதலில் ரோஹித் ஷெட்டி நயன்தாராவைத் தான் அணுகி உள்ளார். ஆனால், அந்த சமயம் தான் 2012-ம் ஆண்டு பிரபுதேவா- நயன்தாரா பிரிவு ஏற்பட்டு இருந்தது. இதனால், ஏற்கெனவே பிரபுதேவா அந்த படத்தில் நடன இயக்குநர் ஆக இருக்கிறார் என்பதை அறிந்து நயன்தாரா ஷாருக்கான் உடன் ஆடும் வாய்ப்பை மறுத்துள்ளார். இதன் பின்னர் அந்தப் பாடலுக்கு நடிகை பிரியாமணி நடனம் ஆடியிருந்தார். இந்தக் கதை பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக உலவி வருகிறது.