உலகம்

இந்த வருடத்தின் சிறந்த ஜோக் இதுதான்.. தமிழிசையே சொல்லிட்டாங்க!

Published

on

டெல்லி: பிரதமர் மோடி பிரியங்கா காந்தியை பார்த்து பயப்படுகிறார் என்பதுதான் இந்த வருடத்தின் சிறந்த காமெடி என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பெரிய உதவும் என்று கூறுகிறார்கள்.

லோக் சபா தேர்தலில் பிரியங்காவின் வருகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதுகுறித்து தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் தனது பேட்டியில், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா முன்னிலை படுத்தப்படுவது ராகுல் காந்தியின் பலவீனத்தை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமை பலம் இல்லாமல் இருப்பதால்தான் தற்போது ராகுல் காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தி முன்னிலைப்படுத்தப்படுகிறார். ராகுல் பலம் இல்லாத தலைவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுகிறார் என்பதை ஏற்க முடியாது. அப்படி சொல்வதுதான் இந்த வருடத்தின் சிறந்த காமெடி. மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கூறுவதுதான் இந்த ஆண்டின் சிறந்த ஜோக். மோடியை பார்த்து பயந்துதான் காங்கிரஸ் பிரியங்காவை களமிறக்கி இருக்கிறது என்பதே சரியானதாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version