சினிமா செய்திகள்
திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே ‘கைதி’ ஹாட்ஸ்டாரில் வெளியாக காரணம் என்ன?
தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் 30 நாள் முடிவில் கைதி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் திரையரங்கு வெளியான ஒரு மாதத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் படங்கள் வெளியானால், மக்கள் எப்படி திரையரங்குகளுக்கு வருவார்கள். சில வாரங்களில் ஆன்லைனைல் வந்துவிடும் என்று திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.
மறுபக்கம் திரையரங்குகளில் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் படங்கள் வெளியாகி து தயாரிப்பாளரைப் பெறும் அளவில் பாதிக்கிறது. 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் இல்லை. எனவே இப்படி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குப் படத்தை 30 நாட்களில் ஒளிபரப்ப அனுமதியளிக்கிறோம். சில படங்கள் திரையரங்குகளில் 1 முதல் 2 வாரங்கள் மட்டுமே ஓடுகின்றன. எனவே இந்த முடிவை நாங்கள் எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று பட தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி சில வாரங்களில் படங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்கப்படும் என்றால் வரும் காலங்களில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 60 சதவீத டிக்கெட் கட்டணத்தை, 50 சதவீதமாக நாங்கள் குறைப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி எடுத்துள்ளனர்.
எனவே அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்கள் ஆன்லைன் தளங்களில் எத்தனை நாட்களில் வெளியாகும் என்று தெரிந்த பின்பே திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இதே போன்று தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் அமேசான் பிரைமில் 30 நாட்களில் வெளியானது குறிப்பிடத்தகக்து.