உலகம்

கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகளை இவ்வளவு சீக்கிரமாக விளக்குவதா?- உலக நாடுகளை எச்சரிக்கும் WHO

Published

on

உலக அளவில் கொரோனாவின் டெல்டா வகை தொற்று அதி வேகமாக பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளன.

இருப்பினும் பல நாடுகளில் ஓராண்டுக்கும் மேல் போடப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் படிப் படியாக விளக்கப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கட்டுப்பாடுகள் முற்றிலும் விளக்கப்பட்டு விட்டன. இதனால் கொரோனா மீண்டும் வேகமடையும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தரப்பு, ‘உலக அரசுகள் கொரோனா தொற்றுப் பரவலை மட்டுப்படுத்த விதித்தக் கட்டுப்பாடுகளை உடனடியாக அல்லது அதிகப்படியாக விளக்கிக் கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். சென்ற ஆண்டும் இப்படித் தான் செய்தோம்.

ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை வீரியமாக தாக்கியது. அங்கு தான் நாம் மீண்டும் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற அச்சம் உள்ளது. இந்த முறை தொற்று பாதிப்பை அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா வேறு பல நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது’ என்று தெரிவித்து உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version