சினிமா செய்திகள்

ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுக்க என்ன காரணம்? சிபி விளக்கம்

Published

on

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சிபி 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்து விட்டு வெளியே வந்து விட்டதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வர என்ன காரணம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது என்பதும் தற்போது 7 போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என்று பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் மூன்று லட்ச ரூபாய் என ஆரம்பிக்கப்பட்ட பணப்பெட்டியின் மதிப்பு தற்போது 12 லட்ச ரூபாய் ஆக மாறி விட்டதை அடுத்து சிபி அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முடிவு செய்தார்.

சிபியை போக வேண்டாம் என தாமரை தடுத்த போது, ‘நீங்கள் எடுத்துக் கொண்டு செல்கிறீர்களா? என சிபி கேட்க அதற்கு தாமரை, ‘நான் எடுக்க மாட்டேன் என்று கூறுகிறார். இதனை அடுத்து பிரியங்கா, ‘இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இன்னும் அதிகமாக பணம் கிடைக்கும்’ என்று கூற அதற்கு சிபி, ‘பணத்திற்காக இல்லை என்னிடம் மன உறுதி இல்லை. ஒரு டாஸ்க்கில் முதலிடம் பிடிக்கும் போது இருந்த மன உறுதி தற்போது என்னிடம் இல்லை. அதனால் தான் நான் வெளியே போக போகிறேன் என்று விளக்கமளிக்கிறார்.

இதனை அடுத்து சிபி ரூபாய் 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது ராஜூ, பிரியங்கா, தாமரை, பாவனி, அமீர் மற்றும் நிரூப் ஆகிய ஆறு பேர்களில் இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளர்கள் யார் யார்? டைட்டில் பட்டத்தை வெல்பவர் யார் என்பதை அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்.

seithichurul

Trending

Exit mobile version