தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம்: கமீலா நாசர்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதற்கு இது தான் காரணம் என நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை வெளியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கையின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கமீலா விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே கமீலா நாசர் தனது சொந்த காரணங்களுக்காக கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி இது ஏன் என்பது குறித்து விளக்கம் கொடுத்து கமீலா நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என் சொந்த பணிகள் காரணம் கருதி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் கற்றுத் தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version