டிவி

‘குக் வித் கோமாளி’ விட்டு மணிமேகலை வெளியேறியது ஏன்?- செஃப் தாமு விளக்கம்!

Published

on

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது ஏன் என்பது குறித்து செஃப் தாமு விளக்கி உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக்கு வித் கோமாளி’. சமைக்கத் தெரிந்த செஃப் மற்றும் சமைக்கத் தெரியாத கோமாளிகள் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து செய்யும் கலவரங்கள் தான் நிகழ்ச்சியின் கான்செப்ட்.

கலகலப்பான இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், முதல் மூன்று சீசனங்களில் கோமாளியாக மணிமேகலை அனைவருக்கும் பிடித்த ஒருவராக மாறினார்.

இப்பொழுது நான்காவது சீசனிலும் அவர் கோமாளியாக இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்பொழுது மணிமேகலை தன்னுடைய சொந்த கிராமத்தில் பண்ணை வீடு கட்டுவதில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், மணிமேகலை திடீரென்று நிகழ்ச்சி விட்டு விலகியது ஏன், நிகழ்ச்சித் தயாரிப்பு தரப்புக்கும் இவருக்கும் ஏதாவது பிரச்சனையா அல்லது மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு விளக்கம் கொடுத்துள்ளார். ‘மணிமேகலை என்னுடைய மகள் போன்றவர். அவர் காமெடியை நாங்கள் நிகழ்ச்சியில் மிகவும் ரசித்துள்ளோம். அவர் இல்லாதது நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய லாஸ் என்பதை மறுக்க முடியாது. அவர் நிகழ்ச்சி தொகுப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளார். அதனால் தான் இந்த நிகழ்ச்சி விட்டு வெளியேறி இருக்கிறார். இது குறித்து அவரே தெளிவான விளக்கம் கொடுப்பார். அவருடைய எதிர்காலம்தான் முக்கியம். அவரது முடிவு என்னவாக இருந்தாலும் எப்பொழுதும் எங்கள் ஆதரவு உண்டு’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version