Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்பட்டது ஏன்? அப்பல்லோ விளக்கம்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது வார்டு உள்பட மருத்துவமனையின் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற போது அப்போலோ நிர்வாகம் தரப்பில் இருந்து வாதம் செய்யப்பட்டது.

அப்போதைய தமிழக அரசு கூறியதால்தான் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்து அகற்றப்பட்டது என்றும் ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் பதிலளித்துள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு பிரவேசி தேவைப்படுவதாக அரசு கூறியதால் தான் சிசிடிவி அகற்றப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவமனை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போதைய அரசு என்றால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தான் அப்போது முதல்வராக இருந்தார் என்பதால் அவர்தான் சிசிடிவி கேமிராக்களை அகற்ற உத்தரவிட்டாரா என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழு உதவி இல்லாமல் ஆறுமுகச்சாமி ஆணையம் கருத்து தெரிவிக்க கூடாது என்றும்ம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் அப்பல்லோ குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தொடர்ந்து ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் தரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்த கருத்துக்களை போதுமானவை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்தியா35 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்59 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!