கிரிக்கெட்

INDvENG- நடுமைதானத்தில் ஸ்டோக்ஸுடன் கோலி சண்டையிட காரணம் என்ன..?- ரகசியம் உடைத்த சிராஜ்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இன்று இரண்டாவது செஷனில் இந்திய அணி 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

நேற்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கைப்பற்றியுடன் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார். அப்படி வந்தவருக்கு பவுன்சர் போட்டு நெருக்கடி கொடுத்தார் சிராஜ். இதனால் கடுப்படைந்த ஸ்டோக்ஸ், சிராஜை கண்டபடி திட்டினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அப்போது ஸ்டோக்ஸ் அருகில் வந்து அவரை சிரித்தபடி எள்ளி நகையாடினார். ஆனால் ஸ்டோக்ஸும் கோலிக்கு விடாமல் கவுன்டர் கொடுக்கவே, அவர் உஷ்ணமானார். கோலி முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, சிடுசிடுத்துப் பேசினார்.

இது மைதானத்திலும் களத்தில் இருந்த வீரர்கள் இடையிலும் பதற்றத்தை அதிகரித்தது. ஆட்டத்தின் நடுவர், இருவரையும் விலக்கி விடும் அளவுக்கு வார்த்தைப் போர் முற்றியது.

இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம், ‘ஸ்டோஸை தொடர்ந்து ஸ்லெட்ஜ் பண்ணு’ என்றார்.

இந்நிலையில் கோலி, ஸ்டோகஸிடம் ஏன் சண்டை போட்டார் என்பது குறித்து முகமது சிராஜ், ‘ஸ்டோக்ஸ் தேவையே இல்லாமல் என்னைக் கண்டபடி திட்டினார். அதனால் தான் கோலி, ஸ்டோக்ஸ் மீது கோபம் கொண்டார்’ எனக் கூறியுள்ளார். ஸ்டோக்ஸ், சிராஜை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியிருப்பார் எனப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்து, பூதாகரமாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version