வீடியோ
விஜய் சேதுபதியை ஏன் எட்டி உதைத்தேன்.. மகா காந்தி அதிரடி!
![vijay sethupathi attack - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/vijay-sethupathi-attack.jpg)
சில நாட்களுக்கு முன்பு, சமுக வலைத்தளங்களில் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் யார் என தெரியாத மர்ம நபர் எட்டி உதைத்த வீடியோ ஒன்று வைரல் ஆனது.
பின்னர் சில ஊடகங்கள் விமானத்தில் பயணிக்கும் போது விஜய் சேதுபதி உதவியாளர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே எட்டி உதைத்ததாகத் தெரிவித்தனர்.
ஆனால், விஜய் சேதுபதியை நான் தான் உதைத்தேன்? கன்னடர், தெலுங்கர் யாரும் உதைக்கவில்லை. தமிழனாகிய நான் தான் எட்டி உத்தைத்தேன் என மகா காந்தி என்பவர் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். இப்போது அந்த காட்சி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி இவர் கிட்ட தான் மிதி வாங்குனார். https://t.co/lmurAlgNDA pic.twitter.com/kjb8tNEBkc
— Krishna Kumar Murugan (@ikkmurugan) November 6, 2021
மகா காந்தியின் அந்த பேட்டியில், “விமானத்தில் பயணிக்கும் போது தேசிய விருது பெற்றதற்கு நான் விஜய் சேதுபதிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு அவர் நன்றி என சொல்லாமல், இது எல்லாம் ஒரு தேசமான என கேள்வி கேட்டார். அது எனக்கு மிகவும் எரிச்சலூட்டியது. எனவே தான் எட்டி உதைத்தேன்” என கூறியுள்ளார்.