உலகம்

சென்டினேலீஸ்கிட்ட மாட்டிப்போம்.. கொல்லப்பட்ட அமெரிக்கர் உடலை எப்படி மீட்பது?!

Published

on

சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை இன்னும் அதிகாரிகள் மீட்கவில்லை.

அந்தமானில் உள்ள சென்டினல் தீவு உலகின் மர்மமான தீவுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் சென்டினேலீஸ் மக்கள், தங்களை உலகின் பிற மக்களிடம் இருந்து பிரித்து, தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டார். அதன்பின் அவரை கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட அவரின் உடல் இன்னும் அந்த தீவில்தான் இருக்கிறது. சென்டினல் தீவின் கடற்கரையில்தான், ஜானை சென்டினேலீஸ் மக்கள் புதைத்து இருக்கிறார்கள். அந்த உடலை எப்படி மீட்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த தீவிற்குள் செல்ல அதிகாரிகளுக்குள் பெரிய அளவில் அச்சம் நிலவுகிறது. அங்கு செல்ல யாரும் விருப்பப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் யார் சென்று அந்த அமெரிக்கரின் உடலை மீட்பார்கள் என்று கேள்வி எழுந்து இருக்கிறது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version