தமிழ்நாடு

இந்த தேர்தலில் ஒரு எதிரினா அது யாரு..?- டிடிவி தினகரன் பதில்

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவியதை அடுத்து, அந்தக் கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் களமிறங்கியுள்ளார். அமமுக, இந்த முறை தேமுதிகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை யார் முதல் எதிரி என்பது குறித்து தினகரன் பதில் அளித்துள்ளார். 

‘ஒரு பக்கம் தீய சக்தி, இன்னொரு பக்கம் துரோக சக்தி… இரண்டுமே வீழ்த்தப்பட வேண்டும். இந்த தேர்தலை திமுக என்னும் தீய சக்திக்கு எதிராகவும், அதிமுக என்னும் துரோக சக்திக்கு எதிராகவும் நாங்கள் சந்திக்கிறோம். எங்கள் நோக்கம், கொள்கை என்பது உண்மையான அம்மாவி்ன் ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவுவது தான். மக்களும் அதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்னும் நம்பிக்கை உள்ளது. 

இந்த தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை உள்ளது. 

அமமுக தொடங்கப்பட்டதன் நோக்கமே, அம்மாவின் கட்சியான அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான். தேர்தலுக்குப் பின்னர் அதற்கான செயல்பாடுகள் குறித்து உங்களுக்குத் தெரியவரும்’ என நிருபர்கள் மத்தியில் பேசினார் தினகரன். 

Trending

Exit mobile version