சினிமா செய்திகள்
ரூ.50 லட்சத்தை வெல்லும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? இன்னும் சில மணி நேரங்களில்…
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையப் போகிறது என்பதும் நாளை ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ரூபாய் 50 லட்சத்தை வென்று பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப் மற்றும் பாவனி ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் இந்த ஐவரில் ஒருவர் நாளை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் இதுவரை மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதால் இவர்கள் இருவருக்கும் பிக் பாஸ் டைட்டில் பட்டம் மற்றும் ரன்னர் அப் பட்டம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இப்பொழுது வரை ராஜுவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் எனவே அவருக்கு டைட்டில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பிரியங்காவும் கிட்டத்தட்ட ராஜூவுக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்றுள்ளார் என்பதும் அடுத்து வரும் சில மணி நேரங்களில் பிரியங்காவுக்கு வாக்குகள் அதிகரித்தால் அவருக்கும் பட்டம் கிடைக்க ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜு மற்றும் பிரியங்கா ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் பட்டம் மற்றும் ரன்னர் அப் பட்டம் வெல்வார்கள் என்றும், மூன்றாவது இடத்தை பாவனி பிடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி கிட்டத்தட்ட நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னிட்டு இன்றே இறுதி போட்டி நிகழ்ச்சியை படமாக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.
எனவே இன்று இறுதி போட்டியில் டைட்டில் பட்டம் வெல்லும் நபர் போட்டியாளர் யார் என்பது தெரிந்துவிடும் என்றும் இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு மாலை 4 மணிக்கு கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதால் இன்றே டைட்டில் பட்டம் வெல்பவர் யார் என்ற தகவல் கசிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வென்று 50 லட்சம் ரூபாய் பரிசு பெறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.