கிரிக்கெட்

ரோஹித் சர்மாவுக்கு பதில் யார்? தமிழக வீரர் துணை கேப்டனா?

Published

on

தென்ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட்டதாக நேற்று பிசிசிஐ தெரிவித்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதில் யார் அணியில் இணைக்கப்படுவார்கள் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யார் என்பது குறித்தும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது என்பதும் டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தேர்வு பெற்று இருந்த ரோகித் சர்மா பயிற்சியின் போது திடீரென காயமடைந்தார். இதனை அடுத்து அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் சர்மா அணியில் இருந்து விலகி விட்டதை அடுத்து அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்ச்சல் என்பவர் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் பிரியங்க் பஞ்ச்சல் தலைமையில்தான் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சித் கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அல்லது அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்படலாம் என்றும் குறிப்பாக தமிழக வீரர் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு பலமுறை பயணம் செய்த சீனியர் வீரர் என்பதாலும் அனுபவிக்க வீரர் என்பதாலும் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version