சினிமா செய்திகள்

’கூழாங்கல்’ உண்மையான தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை பறிக்கப்பட்டதா?

Published

on

’கூழாங்கல்’ படத்தின் உண்மையான தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர்களால் பறிக்கப்பட்டுள்ளதாக திரையுலகினர் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’கூழாங்கல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தை பிஎஸ் வினோத் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தயாரித்தனர்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரான உடன் சர்வதேச விருதுகளுக்கு அனுப்புவதற்காக பிஎஸ் வினோத் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முயற்சி செய்த போது அதற்கான பொருளாதார வசதி இல்லை என தெரிகிறது.

இதனை அடுத்து பிஎஸ் வினோத் ராஜின் நண்பர்கள் விக்னேஷ் சிவனிடம் இந்த படத்தை போட்டு காட்டினார்கள். விக்னேஷ் சிவனுக்கு இந்த படம் பிடித்து விட சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தன்னிடம் மொத்த படத்தையும் விற்றுவிடுங்கள் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பணம் கொடுத்து வாங்கி விட்டனர். அதன்படி ’கூழாங்கல்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாகவும் மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்துக்கு ஒருவேளை விருது கிடைத்தால் தயாரிப்பாளர் என்ற முறையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் தான் இந்த படத்தின் விருதை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

’கூழாங்கல்’ படத்தை உண்மையாகவே கஷ்டப்பட்டு தயாரித்த பிஎஸ் வினோத்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் நயன்தாரா விக்னேஷ் சிவன் பறித்து கொள்வதாக திரை உலகினர் கூறிவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version