சினிமா செய்திகள்
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 92-வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் இந்த நிகழ்ச்சியை முடிவடைய உள்ளதால் க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விக்ரமன், ஷிவின், அமுதவாணன், மைனா, கதிரவன், அசீம் மற்றும் ஏடிகே ஆகிய 7 போட்டியாளர்கள் மட்டும் இருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் இந்த வாரம் எவிக்ட் செய்யப்படுவார்.
அதுமட்டுமின்றி இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வரும் நிலையில் அந்த பண பெட்டியை எடுத்துக் கொண்டு செல்பவர் யாராக இருக்கும் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்பது அவர்களுக்கே தெரியும் என்பதால் அவர்கள் இருவருமே பண பெட்டியை எடுக்க முன்வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முதல் 10 லட்சம் வரைதான் பணப்பெட்டியில் இருக்கும், ஆனால் டைட்டில் வின்னர் ஆனால் 50 லட்சம் கிடைக்கும் என்பதால் விக்ரமன், ஷிவின் ஆகிய இருவரும் பண பெட்டியை எடுக்க வாய்ப்பே இல்லை.
மேலும் அமுதவாணன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளதால் அவர் தனக்கும் டைட்டில் வின்னருக்கான வாய்ப்பு இருப்பதாக நம்புவதால் அவரும் பணபெட்டியை எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மைனா ஏற்கனவே பலமுறை தான் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பார் என்று நம்பலாம்.
இதனை அடுத்து மீதமுள்ளவர்கள் அசீம், கதிரவன் மற்றும் ஏடிகே ஆகியோர்கள் தான் உள்ளனர். இதில் அசீம் பணப்பெட்டியை எடுப்பாரா? என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் கதிரவன் மற்றும் ஏடிகே ஆகிய இருவரில் ஒருவர் தான் பணப்பெட்டியை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று கமல்ஹாசனின் எபிசோடில் கதிரவன் தான் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். கதிரவனும் அதனை அனுமதித்தார். ஆனால் அதே நேரத்தில் தனது பெற்றோர்களுக்காக வீடு கட்டித்தர வேண்டும் என்பது தனது கனவு என ஏடிகே கூறியுள்ளதால் அவரும் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
எனவே இந்த வாரம் வரும் பணப்பெட்டி டாஸ்க்கில் எத்தனை லட்சம் ரூபாய் வரும்? யார் அந்த பணப்பெட்டியை எடுப்பார்? என்ற பரபரப்பு போட்டியாளர்களிடையே மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.