சினிமா செய்திகள்
கொலையுதிர் காலம் படத்தை நயன்தாரா முடித்துக் கொடுத்தாரா இல்லையா?
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது தான் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது மிகப்பெரிய பின் விளைவுகளை ராதாரவி மற்றும் படக்குழுவுக்கு அளித்துள்ளது.
மேலும், நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், கொலையுதிர் காலம் படத்தை அன்ஃபினிஷ்ட் மூவி என ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார். இதனை எதிர்த்து தயாரிப்பாளர் மதியழகன் தரப்பில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் முடிவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், விநியோகஸ்தரர்களின் சந்தேகங்களை போக்க, பிரத்யேகமாக போட்டும் காட்டியுள்ளனர். இந்த படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.