தமிழ்நாடு
ரூ.900 கோடி எங்கே? திடீரென கொந்தளித்த இயக்குனர் சேரன்!
சென்னை நகரமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரூ.900 கோடி எங்கே என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு வருவாய் 900 கோடி தந்தது. இந்த பணத்தில் சென்னை திநகர் உள்பட பல பகுதிகளில் வெள்ளம் வந்தால் பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிமுக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது இரண்டு நாள் மழைக்கே திநகர் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்… இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதல்வர் அய்யா. என்று தனியும் இந்த…. என பதிவு செய்துள்ளார். இயக்குனர் சேரனின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.
மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்… இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க @CMOTamilnadu அய்யா.
என்று தனியும் இந்த…. https://t.co/DBIp5lkgCr— Cheran (@directorcheran) November 7, 2021