இந்தியா
கருப்பு பணம் எல்லாம் எங்கே போனது? மோடி அரசை கேள்வி கேட்கும் மம்தா பேனர்ஜி!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் 99.3 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கருப்புப் பணத்தினை ஒழிப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தினை அறிமுகம் செய்வதாக மோடி அரசு கூறியிருந்ததை நினைவு கூர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கருப்புப் பணம் எல்லாம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
As soon as the draconian #DeMonetisation was announced on Nov 8, 2016, I immediately sensed by intuition that this is a big anti-people measure. It will severely affect common people, especially, farmers, unorganized sector, small entrepreneurs, hard-working middle class. 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2018
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 993 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அப்படியானால் கருப்புப் பணம் எல்லாம் எங்கே போனது?
Today, the RBI in its annual report for 2017-18 has vindicated our apprehension.
99.3% of the money has come back to the banking system. 2/3— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2018
பெரும் பண முதலைகள் எல்லாம் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தினை வெள்ளையாக மாற்றிக்கொள்ளத் தான் இந்தத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதா எனத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மம்தா பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
My first question now is –where has the black money gone?
My second question – was this scheme hatched to allow some black-money holders to quietly convert their black money into white?
What a tragedy and what a shame!!! 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2018
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் கிழ் பயன்பாட்டில் இருந்து வந்த 15.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ புதன் கிழமை அறிவித்து இருந்தது.