இந்தியா

வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.. மத்திய அரசு.. ஏன் தெரியுமா?

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிகப் பெரிய அளவில் தக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதும் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என்று கூறியுள்ளது.

கொரோனா தொற்று அறிகுறியே இல்லாமலும் மக்கள் இருக்கிறார்கள் இப்படி அறிகுறி ஏதும் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் போது கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.

இப்படி கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாதவர்கள், வீட்டில் உள்ள பிறரிடம் பேசுவதன் மூலமாகக் கூட கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே மக்கள் வீட்டில் உள்ள போது மாஸ்க் அணிவது நல்லது என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் விகே பால் பரிந்துரைத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருந்து இந்த நேரத்தில், பலர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version