தமிழ்நாடு

டிக்டாக்கை தடை செய்ததே எனக்காகத்தான்: நாம் தமிழர் கட்சியின் சீமான்

Published

on

எனக்காகத்தான் மத்திய அரசு டிக்டாக்கை தடை செய்தது என்றும் வாட்ஸ் அப்பில் பார்வேர்ட் மெசேஜ் ஐந்தாக குறைத்ததும் எனக்காகத்தான் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நடிகரும் இயக்குனருமான சீமான் இதுவரை ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கூட வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் தேர்தலிலும் அவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பதும் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் செய்தபோது ஆண்டு வருமானத்தை குறைத்து காண்பித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய சீமான் அதன் பின்னர் மீண்டும் சரியான வருமானத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிக் டாக் மற்றும் வாட்ஸ் அப்பிற்கு கட்டுப்பாடு விதித்தது என்னுடைய வளர்ச்சியை தடுக்கவே என்று சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். டிக்டாக்கில் என்னை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடி பேர்கள் என்றும் என்னுடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் என்னுடைய வளர்ச்சியை தடுப்பதற்காகவே டிக்டாக் தடை செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் பார்வேர்ட் செய்யும் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்ததும் என்னுடைய வலிமையை குறைப்பதற்காக தான் என்றும் சீமான் ஆதங்கத்துடன் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version