தமிழ்நாடு
10.5% உள் ஒதுக்கீட்டில் வேலை பெற்றவர்களின் நிலை என்ன? அதிர்ச்சி தகவல்!
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா செல்லாது என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு மனுவிலும் இந்த மசோதா செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே 10.5 சதவீத ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று கூறப்பட்டிருந்தது .
தற்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து 10.5 சதவீத ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் ரத்தாகும் அபாயம் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.