இந்தியா
தீர்ப்பு வந்தது சரி.. தனியாரிடம் கொடுத்த ஆதார் விவரங்கள் என்ன ஆகும்?
![aadhar-759 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/aadhar-759.jpg)
டெல்லி: ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்பதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
ஆதார் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்றுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு முன் கொடுத்த விவரங்களை என்ன செய்வது என்ற குழப்ப எல்லோருக்கும் எழுந்து இருக்கிறது. அந்த தகவல்களை திரும்ப பெற முடியாதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, ஆதார் விவரங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் இன்னும் 6 மாதத்திற்கு மட்டுமே அந்த விவரங்களை வைத்திருக்க முடியும். அதனால் அவர்கள் தங்கள் தரவுகளில் இருந்து விவரங்களை நீக்கிவிட வேண்டும்.
இதனால் தனியாரிடம் சென்ற ஆதார் விவரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.