சினிமா

பிரதீப் ரங்கநாதன்-விக்னேஷ் சிவன் கூட்டணி படத்தலைப்பு என்ன?

Published

on

பிரதீப் ரங்கநாதனுடன் விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் தலைப்பு குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இப்பொழுது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் ’ஏகே 62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

இன்னொரு பக்கம், இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்து யாருடன் இணைய இருக்கிறார் என்பது குறித்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அஜித் படத்தில் இருந்து விலகியதை அடுத்து அவர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைய இருக்கிறார் எனவும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் களத்தை மையமாக கொண்டு உருவாகிறது எனவும் சொல்லப்படுகிறது. படத்திற்கு எல்.ஐ.சி. (லவ் கார்ப்பரேஷன் இன்ஷூரன்ஸ்) எனவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவல் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு விரைவில் அறிவிக்கும்.

Trending

Exit mobile version