Connect with us

கட்டுரைகள்

EIA 2020 என்றால் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன?

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவை மறந்து அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக EIA 2020 (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020) உள்ளது. எனவே EIA 2020 என்றால் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களைத் தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும்.

அதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், ஒரு இடத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு அந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்து, வர இருக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லை என்றால் அனுமதியும், ஆபத்து எனில் அனுமதியை மறுக்கவும் செய்யும்.

உதாரணத்திற்கு, நீங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ரசாயன தொழிற்சாலை தொடங்க இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சம்மந்தப்பட்ட நிறுவனம் அங்கு தொழிற்சாலையைத் தொடங்கும் முன்பு தொழிற்சாலை அமைக்கப்படும் வடிவம், பரப்பளவு, அதிலிருந்து வெளியாகும் கழிவுகள், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், கழிவுகளைப் பாதிப்பு ஏற்படாதபடி வெளியேற்றுவதற்கான வழிமுறை குறித்து ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

அதனை ஆய்வு செய்யும் அரசு, பசுமை தீர்ப்பாயம் மற்றும் மக்களிடம் கருத்துக்களைக் கேட்கும். பின்னர் அதில் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போது அனுமதியளிக்கும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ எதிர்க்க என்ன காரணம்?

மேலே உள்ளதைப் படிக்கும் போது, இது நல்லது தானே, அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி எழும். ஆனால் சுற்றுச்சூழல் தாக்கச் சட்டம் 2006 உள்ள போதே பல நிறுவனங்கள் அதற்கு எதிராக தங்களது தொழிற்சாலையாகச் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதற்குத் தமிழகத்தில் ஸ்டெர்லைட், ஸ்பிக் உள்ளிட்ட நிறுவனங்கள் சாட்சி.

இந்நிலையில் 2020 மார்ச் 12-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020, நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும், அதில் ஏராளமான குறைகள் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் தலையிட்ட நீதிமன்றம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையை 22 மொழிகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை மதிக்காத அரசு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்துக் கேட்கவும் உத்தரவிட்டுள்ளது. அதற்கு 20 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கச் சட்டங்கள் ஓர் அளவுக்குக் கடுமையாக உள்ள போதே நிறுவனங்கள் அதை மதிக்காமல் செயல்படுகின்றன என்று கூறப்படும் நிலையில், நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பல திருத்தங்களைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ல் செய்துள்ளது என்பதே அதை எதிர்ப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

EIA-2020 வரைவு அறிக்கை நகல்:

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!