இந்தியா

விலை உயர்ந்த, குறைந்த பொருட்கள் எவை எவை… மத்திய பட்ஜெட் Rewind…

Published

on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) மக்களவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள இந்த சூழலில் பல்வேறு வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமல்லாது பொருளாதார நிபுணர்களும் பட்ஜெட் அறிக்கையில் என்னென்ன சிறப்பு அறிவிப்புகள் வெளியாக உள்ளன எனக் கூர்ந்து கவனித்து வந்தனர்.

அதுமட்டுமல்ல இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரல் தொடங்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட் “முன்னர் வெளியானதை போலவே” இருக்கும் என்று சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மற்றொரு சிறப்பு சுதந்திர இந்திய வரலாற்றில் வெளியாகும் முதல் காகிதமில்லாத பட்ஜெட்டாகும். சீதாராமன், 2019 ஆம் ஆண்டில் வாசித்த தனது முதல் பட்ஜெட்டில், ‘பாஹி-கட்டா’ என்ற பாரம்பர்ய சிவப்பு துணியால் ஆன தோல் சூட் கேசில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுவந்தார். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட்-இல் மாற்றி கொண்டுவந்தார். நாம் அறிந்த வகையில் இதை தவிர வேறு எந்த மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறைந்துள்ளது என்பதை பார்ப்போம்

விலை அதிகரித்துள்ள பொருட்கள் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல், சார்ஜர், ஜெம்ஸ், தோல்லான சூ-க்கள்
விலை குறைந்துள்ள பொருட்கள் : இரும்பு, தகரம், நைலான் துணிகள், காப்பர் பொருட்கள், காப்பீடு, மின்சாரம், இரும்பு பொருட்கள்

தனியாருக்கு விற்கப்பட உள்ளவை

2022ம் ஆண்டுக்குள்ள் எல்.ஐ.சி பங்குகள் மக்களுக்கு விற்பனை செய்யபடும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஐடிபிஐ வங்கி தவிர மேலும் இரண்டு வங்கிகள், ஏர் இந்தியா, பிபிசிஎல், கான்கார் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும் தனியார் துறைக்கு 2022ம் ஆண்டிற்குள் விற்பனை செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version