கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி!

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு சென்று விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து டி20 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி தொடரை வென்றுள்ளது.

நேற்று முதல் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 14.5 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 67 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இதனை அடுத்து அந்த அணி தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நாளையும் ஐந்தாவது டி20 போட்டி ஜூலை 16ம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜூலை 21ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தவுடன் மேற்கிந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது என்பதும் அங்கு ஐந்து டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version