/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

வணிகம்

பெட்ரோல் மீதான வரியை குறைத்த மேற்கு வங்கம்.. தமிழக அரசும் செய்யுமா?

Published

on

பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் பெரும் அளவில் பயன் பெறுவார்கள். பெட்ரோல் மீதான வரியில் மத்திய அரசுக்கு 32.90 ரூபாயும், மாநில அரசுக்கு 18.46 ரூபாயும் வரி வருவாயாகக் கிடைக்கிறது என்று மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.

ஒருவேலைத் தமிழக அரசு இந்த வரி குறைப்பை அறிவித்தால், கண்டிப்பாக இது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது.

இன்று சென்னையில் பெட்ரொல் விலை லிட்டர் ஒன்றுக்கு 92.59 ரூபாய் என்றும், டீசல் லிட்டர் 85.98 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending

Exit mobile version