தமிழ்நாடு

இவர்தான் ஜூனியர் மீராபாய் சானு: வீடியோ வெளியிட்ட தமிழக பளுதூக்கும் வீரர்

Published

on

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நேற்று டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய மீராபாய் சானுவுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் அவரை இராணுவ அதிகாரிகள் வரவேற்று பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மீராபாய் சானு என்ற ஒரே ஒரு இந்தியர் பெற்ற வெள்ளிப்பதக்கம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இளம் வீராங்கனைகளுக்கு அவர் ஒரு உந்து கோலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் மீராபாய் சானுவை போலவே குழந்தை ஒன்று பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுதான் உண்மையான உந்துகோல் என்றும் மீராபாய் சானுவை பார்த்து பலர் வருங்காலத்தில் பளுதூக்கும் வீராங்கனையாக இந்தியாவில் மாறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்ற உடன் தனது வாழ்த்துக்களை சதீஷ் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version