சினிமா செய்திகள்

தமிழிசைக்கு ஆப்பு; அதிரடி அறிக்கை வெளியிட்ட அஜித்!

Published

on

நடிகர் அஜித்குமார் தான் தனக்கு பிடித்த நடிகர் என்றும், வரும் தேர்தலில் அஜித் ரசிகர்கள் மோடியின் புகழையும் பா.ஜ.கவின் பெருமையையும் தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் நேற்று தமிழிசை கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், நடிகர் அஜித் தனது நீண்ட விளக்க அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.

தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஆர்வம் வைத்திருக்கவில்லை என்றும். எனது பெயரை பயன்படுத்தி யாரும் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள தான் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும், தனது ரசிகர்களும் அதனை கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசியல் நிகழ்வுகளில் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் தான் ஒரு தொழில் முறை நடிகன் என்றும், தனது பணி நடிப்பது மட்டும் தான், யாரிடமும் மோதவோ அல்லது அரசியல் செய்யவோ இங்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரசிகர்கள் ஒழுக்கமற்ற வார்த்தைப் போர்களில் சமூக வலைதளங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், மற்ற நடிகர்களை கொச்சைப் படுத்துவதை தான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version