தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்!

உலக தாய் பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரையில் கொண்டாடப்படுகிறது.

பிற பால்களுடன் ஒப்பிடும் போது, தாய்ப்பால் ஒரு உன்னதமான சத்துணவு ஆகும்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் தாய் என இருவரின் ஆரோக்கியமும் நலம் பெரும்.

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது, மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும்.

தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும்

தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.

தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது.