தமிழ்நாடு

சென்னையில் இன்றும் வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் சொன்ன வார்னிங்

Published

on

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாசாலை உள்ளிட்ட சில இடங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது . கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், தாம்பரம், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, சென்னை விமான நிலையம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது .

கடும் வெயிலுக்கு இடையில் திடீரென சென்னையில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்தது. பல மாவட்டங்களில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்துக்கொண்டு இருந்தது. முக்கியமாக சென்னையில் 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்துக்கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்கிறது.

இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version