தமிழ்நாடு
சட்டசபையில் ‘ஜெய்ஹிந்த்’ என முழங்குவோம்: எல் முருகன் அறிவிப்பு!
சமீபத்தில் தமிழக சட்ட சபை கூடியபோது கவர்னர் உரையில் கடைசியாக ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லாமல் இருந்தது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் முதல்வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்
கவர்னர் உரையை தயாரித்தது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்றும் அவர்தான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நீக்கி விட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் போன்ற முழக்கங்களை தொடர்ந்து எழுதுவோம் என பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்திய திமுகவின் செயலை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பிரிவினையை தூண்டும் வகையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கத் தொடங்கி உள்ளார்கள் என்றும் எல் முருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்து இன்னும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எந்தவித பதிலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.