தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்போம்.. பலர் சிறை செல்வார்கள்.. ஸ்டாலின் பளார்

Published

on

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இதில் அவ்வப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயலலிதாவிற்கு சரியான மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து வெளியாகும் தகவல்களால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் இதுகுறித்து மக்களிடம் பேசினார்.

அதில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். நாங்கள் இந்த வழக்கை முறையாக விசாரிப்போம். ஜெயலலிதாவின் மறைவுக்கு காரணமானவர்கள் சிறை செல்வார்கள்.

seithichurul

Trending

Exit mobile version