இந்தியா
உண்ணாவிரதம் இருந்தாலும் உண்ணும் விரதம் இருந்தாலும் மேகதாது அணை கட்டியே தீருவோம்: முதல்வர் பசவராஜ்
உண்ணாவிரதம் இருந்தாலும் உண்ணும் விரதம் இருந்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்களும், தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் அவர்களும் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். ஆனால் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசு சூளுரைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேகதாது அணையை கர்நாடக மாநில அரசு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள பாஜக, கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது என்றும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உண்ணும் விரதம் இருக்கட்டும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்றும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு அண்ணாமலை என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதேபோல் புதிய கர்நாடக முதல்வர் பசவராஜ் மேகதாது நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.