தமிழ்நாடு
தமிழகத்தை சரிசெய்ய எங்களுக்கு 10 ஆண்டுகள் தேவை: கமல்ஹாசன்
50 ஆண்டுகளாக செய்த தவறை சரி செய்ய எங்களுக்கு 10 ஆண்டுகள் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் புதிய அணியாக போட்டியிடும் கட்சி மக்கள் நீதி மய்யம் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணியுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்துவரும் கமலஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் செய்த தவறை சரி செய்ய பத்து ஆண்டுகளாவது எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் தாலிக்கு தங்கம் தருகிறார்கள் மறுபுறம் டாஸ்மாக் கடைகளை திறந்து தாலியை பறிக்கின்றார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.