கிரிக்கெட்
இந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம்.. கலங்கிய கோலி!
![இந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம் - Bhoomitoday இந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம்](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/08/Kohli12.jpg)
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார்.
கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது.
![இந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம் - Bhoomitoday இந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம்](https://seithichurul.com/wp-content/uploads/2018/08/Kohli12-300x200.jpg)
இந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம்
இதையடுத்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கேரளா வெள்ளம் குறித்து, இந்த வெற்றியை கேரளா மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அவர்கள் பல கஷ்டங்களை கடந்து இருக்கிறார்கள். அங்கு மிகவும் மோசமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.